சோறு சுதந்திரம் சுயமரியாதை
துனீசியா, எகிப்து, லிபியா, பஹ்ரைன் என மக்கள் எழுச்சி தொடர்கிறது.
வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வீற்றிருந்த சர்வாதிகாரிகள் ஒவ்வொருவராக ஆட்சிப் பீடத்திலிருந்து துரத்தப்படுகிறார்கள்.
ஒரு புறம் இராணுவம் எல்லா வகையான ஆயுதங்களையும் பிரயோகிக்கத் தயாராக நிற்க, மறுபுறம் இளைஞர்களும் யுவதிகளும் சாலைகளில் நிரம்பி ஆயுதம் எதுவும் இல்லாமல் அறப்போராட்டம் நடத்தி அரசை ஸ்தம்பிக்கச் செய்தனர். பயங்கரவாதத்தின் பெயரில் வல்லாதிக்க அரசுகள் மக்களைக் கொன்று குவித்து வரும் வேலையில் ஆயுதமின்றி போராடும் இந்த நவீன காந்தியவாதிகளின் உந்துசக்தியாக அமைந்தது என்ன?
கணிப்பொறியின் விசைப்பலகையை மட்டுமே நவீன ஆயுதமாக நம்பிய இந்த திடீர் கிளர்ச்சியை பின்நவீனத்துவ எழுச்சி என்று சுட்ட முடியுமா?
மையப்படுத்தப்பட்ட அமைப்பு, தலைமை, வரையறுக்கப்பட்ட செயல்திட்டம் இவை எதுவும் இல்லாமல் வீதிகளில் திரண்ட இந்தப் பெருந்திரள் மக்கள் போராட்டத்தை புரட்சி என்று அழைக்க முடியுமா?
என்ன நடக்குது மத்திய கிழக்கில்?
நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்
இடம்: மாவட்ட மைய நூலகம் சிற்றரங்கம் (LLA பில்டிங்)
நாள்: 01.04.2011
நேரம்: மாலை 6 மணி முதல் 9 மணி வரை.
பங்குபெறுவோர்:
முனைவர் மணிவண்ணன்,
பேரா. அரசியல் அறிவியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
துரைசிங்கவேல்,
ஆசிரியர், புதிய போராளி.
எஸ்.எம். ரஃபீக் அஹமது,
மாநிலப் பொதுச் செயலாளர், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI)
சு.பொ. அகத்தியலிங்கம்,
ஆசிரியர், தீக்கதிர்.
இவர்களுடன்பேரா. அ. மார்க்ஸ்.
No comments:
Post a Comment